Friday, October 30, 2015

17 Step’s தான் ஏற்றுமதி/இறக்குமதி தொழில் ரகசியம் !!!

Step 1: ஏற்றுமதிக்கான பொருள் மற்றும் இறக்குமதியாலரை அடையாளம் காணுதல்.
Step 2: ஏற்றுமதி நிறுவனத்தை அமைத்தல்.
Step 3: பாண் எண் பெறுதல்.
Step:4 I.E. Code விண்ணப்பித்து பெறுதல்.
விண்ணபிக்க வேண்டிய அலுவலகங்கள்:
———————————-
a) Joint Director General of Foreign Trade, Shastri Bhavan Annex,
4th Floor, Chennai – 600 006. Phone: 044 – 28283408.
b) Joint Director General of Foreign Trade, No.1544, India Life Building
(Annex), 1st Floor, Trichy Road, Coimbatore 641 018 Phone: 0422 2300 947
c) Joint Director General of Foreign Trade, Plot No. 117, First Main Road,
K.K.Madurai – 625 020. Phone: 0452 – 2586485
Step 5: உங்கள் பொருளுக்கு பொருத்தமான ஏற்றுமதி வளர்ச்சி கழகத்தில் உறுபினராதல்.
Step 6: ஏற்றுமதி பொருளுக்கான விலையை குறிபிடுதல்.
FOB; C&F; CIF
விலையை அமெரிக்க டாலர், பவுண்ட், ஸ்டேர்லிங், யூரொ (அ) ஜப்பான் யென்னில் குறிப்பிடவும்.
Step 7: தொகை செலுத்துவதற்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல்.
முன்பணமாக பெறுதல்;
கடனுருதி கடிதம் மூலம் பெறுதல்;
ஆவணங்களின் மீது பெறுதல்;
ஆவணகள் பெற்ற பின் பெறுதல்.
Step 8: ஏற்றுமதி உத்திரவு பெறுதல் / கடனுறுதி கடிதம்.
அ) விலை (கப்பல் மூலமா, விமானம் மூலமா, என்று குறுப்பிட வேண்டும்)
ஆ) சரகுகளை அனுப்பிய தேதி.
இ) தொகை செலுத்தும் விதம்.
Step 9: ஏற்றுமதி வங்கியில் கடன் வசதி பெறுதல்.
Step 10: காப்பீடு- எல்லா இடர்களையும் காப்பீடு செய்யும் ECGC பாலிசி இறக்குமதியாளரின் நிதி தகுதி போன்றவற்றை உறுதிபடுத்தும்.
அ) ஸ்பென்செர் டவர்ஸ் 7ஆவது மாடி,
770ஆ, அண்ணா சாலை, சென்னை 600 002.
தொலைபேசி 044-2849 1026
ஆ) முதல் மாடி, காமராஜர் நகர், 2வது தெரு,
OCPM ஸ்கூல் தெரு, சின்ன சொக்கிகுளம்,
மதுரை – 625 002
தொலைபேசி: 0452 – 2520 340
இ) சேரன் பிளாசா (2வது மாடி),
1618, திருச்சி ரோடு, கோயம்புத்தூர் -641 018.
தொலைபேசி : 0422 – 2304 775
Step 11: ஏற்றுமதி பொருளின் தரத்தை சோதிக்கவும். மாதிரியை சேகரிக்கவும், தரத்தை சோதிக்கவும், இறகுமதியாலரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய பரிசோதனை முகவர்களால் சோதனை மேற்கொள்ள பட வேண்டும்.
Step 12: இறக்குமதியாளரின் தேவைக்கு ஏற்ப பொருள்களை பேக் செய்யவேண்டும்.
Step 13: இன்வாய்ஸ், பேய்கிங் லிஸ்ட் தயாரித்து அதனை ஷிப்பிங் ஏஜெண்டுக்கு அனுபவும்.
Step 14: சரக்கினை துறைமுகத்திலுள்ள சுங்கத்துறை கிடங்கிற்கு ஷிப்பிங் ஏஜென்ட் துணையுடன் அனுபவும்.
Step 15: ஷிப்பிங் ஏஜென்டிடம் இருந்து கீழ்க்கண்ட ஆவணங்களை பெற்றுகொள்ளவும்.
1. இன் வாய்ஸ் – 1
2. பேக்கிங் லிஸ்ட் – 1
3. Bill of Lading (B/L) அசல் 3, நகல் 4
4 சர்டிபிகேட் ஆப் ஆர்ஜின் – 3 காபிகள்,
5 ஏற்றுமதிக்கான ஷிப்பிங் பில்
எற்றுமதியாலரின் பிரதி – 1
வங்கி பிரதி -1
6. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் – 1
16). தொகையை வசூலிப்பதற்கான ஆவணங்களை உங்கள் வங்கியில் சமர்ப்பித்து வங்கியிடமிருந்து கப்பலில் சரக்கினை ஏற்றிய பிறகு உதவியினை பெறவும்.
17). தேவையான ஆவணங்களை ஏற்றுமதி கழகம் அல்லது முகவரிடம் ஊக்கதொகை, மானியம் பெறுவதற்காக சமர்பிக்கவும்.
இதனை செயல்படுத்துங்கள் சந்தேகம் வரும் பொழுது “ஓம் முருகா” நிர்வாகி, தமிழ் தூதர்.திரு.ராஜன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்: 9943826447, tamilembassy@gmail.com
—————————————
இதை உங்கள் முகனூலில் பகிரவும் உலக தமிழர் பயன்படட்டும்….
(உலக தமிழர்கள் பொருளாதார வளர்ச்சி “ஓம் முருகா” முகநூல், தமிழ் தூதர்.ராஜனின் லட்சியம்)

Monday, August 31, 2015

இன்று முதல் அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை கொடுங்கள் கூடவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகாரையும் கொடுங்கள்.

இன்று முதல் அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை கொடுங்கள் கூடவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகாரையும் கொடுங்கள்.
THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION
NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD),
RAJA ANNAMALAIPURAM, CHENNAI – 600 028.
Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142 / 9445048999 / 9445048990
Fax : 91-44-24616070
E-mail: dvac@nic.in
Headquarters
Officers' Name & Address
Phone Numbers
The Director,
Vigilance and Anti-Corruption,
NCB 21, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24612561 (Direct)
044-24615929/24615949
044-24615989/24954142
Fax:044-24616070
The Joint Director,
Vigilance and Anti-Corruption,
NCB 22, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028
044-24615969 (Direct)
044-24615929/24615949
044-24615989/24954142
Fax:044-24617553
The Dy. Director,
Vigilance and Anti-Corruption,
NCB 27, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram
Chennai – 600 028.
044-24617154 (Direct)
044-24615929/24615949
044-24615989/24954142
Central Range
Officers' Name & Address
Phone Numbers
The Superintendent of Police,
Central Range,
Vigilance and Anti-Corruption,
NCB 25, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044- 24954171 (Direct)
044-24615929 / 24615949
044-24615989 / 24954142
Headquarters Vigilance office:
The Addl. Superintendent of Police,
Headquarters,
Vigilance and Anti-Corruption,
NCB 27, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24618285 (Direct)
044-24615929 / 24615949
044-24615989 / 24954142
Cell:94450-48858
The Deputy Superintendent of Police,
Headquarters,
Vigilance and Anti-Corruption,
NCB 21, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai-28.
044-24615999 (Direct)
044-24615929 / 24615949
044-24615989 / 24954142
044-22294555 (Res)
Cell:94450-48860
Chennai CSU - I Vigilance office:
The Addl. Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
City Special Unit - I,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24613020 (Direct)
044-24615929 / 24615949
044-24615989 / 24954142
Cell:94450-48859
Chennai CSU - III Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Special Unit - III,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.
044-24326020 (Off)
044-22770351 (Res)
Cell:94450-48867
Chennai City - I Vigilance office:
The Deputy Superintendent of Police
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - I,
NCB 24, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24615929 / 24615949
044-24615989 / 24954142
044-24621232 (Direct)
044-23763363 (Res)
Cell:94450-48861
Chennai City - II Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - II,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.
044-24326050 (Off)
044-24691201 (Res)
Cell:94450-48863
Chennai City - III Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - III,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.
044-24326040 (Off)
044-26287361 (Res)
Cell:94450-48864
Chennai City - IV Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - IV,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.
044-24328010 (Off)
Cell:94450-48865
Chennai City - V Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Chennai City Unit - V,
# 485,TNHB Building, IInd Floor,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.
044-24326080 (Off)
044-28262370 (Res)
Cell:94450-48866
Kanchipuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Ragavendra Nagar, Thiruparuthikundram
Kancheepuram – 631 501.
044-27237139 (Off)
044-27236466 (Res)
Cell:94981-06007
Western Range
Officers' Name & Address
Phone Numbers
The Superintendent of Police,
Western Range,
Vigilance and Anti-Corruption,
NCB 23, P.S. Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai - 600 028.
044-24622794 (Direct)
044-24615929 / 24615949
044-24615989 / 24954142
Coimbatore Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 11/332, Cross Cut Road,
(Opp to Shivangali Building)
Gandhipuram,
Coimbatore – 641 012.
0422-2238647 (off)
0422-2234769 (Fax)
Cell:94450-48882
Erode Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1/2, Kamatchi Amman Koil Street,
Karungalpalayam,
Erode – 638 003.
0424-2210898 (off)
0424-2220273 (Res)
Cell:94450-48881
The Nilgiris Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Stone House Hill, Maduvana Junction,
Kothagiri Road, Ooty
The Nilgiris – 643 001.
0423-2443962 (off)
Cell:94450-48883
Salem Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# B-3, Rajaji Street, Swarnapuri,
Salem – 636 004.
0427-2448735 (off)
0427-2210070 (Res)
Cell:94450-48877
Namakkal Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1/7-1, Thiruchengodu Main Road,
Near Post Office,
Nallipalayam Post,
Namakkal - 637 003.
04286-281331 (off)
04268-281144 (Res)
Cell:94450-48878
Dharmapuri Vigilance office:
Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Ramasamy Gounder Street,
No.11, Kamala lakshmi Colony,
Dharmapuri – 636 701.
04342-260042 (off)
04342-269450 (Res)
Cell:94450-48879
Krishnagiri Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Byanapalli Village, Bangalore Main Road,
Ramapuram Post
Krishnagiri - 635 115.
04343- 226611 (off)
04343-226644 (Res)
Cell:94450-48880
Vellore Vigilance office:
The Addl. Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Near Vasanthapuram, Railway Gate,
Vellore – 632 001.
0416-2220893 (off)
Cell:94981-05737
Cuddalore Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 16, Pavazha Salai, Anna Nagar,
Near S.P office Back side
Cuddalore – 607 001
04142-233816 (off)
04142-292500 (Res)
cell:94981-05888
Villupuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 92A, Radhakrishnan Salai, VGP Nagar,
East Sala Medu,
Villuppuram - 605401
04146-259216 (off)
Cell:94981-05781
Thiruvannamalai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 1164, Main Road, Thendral Nagar,
Vengikkal, Thiruvannamalai.
04175-232619 (off)
Cell:94981-05988
Thirupur Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 40, Ashar Nagar, 2nd Street,
40 Feet Road, Gandhi Nagar Post,
Thirupur - 641603
0421-2482816 (off)
Cell:94450-48880
Southern Range
Officers' Name & Address
Phone Numbers
The Superintendent of Police,
Southern Range,
Vigilance and Anti-Corruption,
NCB 24, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24959597 (Direct)
044-24615929/24615989
044-24615949/24954142
Trichy Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Race Course Road, Opp to Anna Stadium,
Thiruchirappalli – 620 023.
0431-2420166 (Off)
Cell:94450-48885
Ariyalur Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
3/922, C1Kayarlabath, Sasthri Nagar,
Kallankurichi Salai,
Ariyalur.
04329-228442 (Off)
Cell:94981-89000
Pudukottai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
SF No.6089/8, Alankulam Housing Unit,
(Near Collectorate)..
Pudukottai – 622 005.
04322-222355 (Off)
04322-260160 (Res)
Cell:94450-48887
Thanjavur Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Tamil University Post,
Thanjavur – 613 010.
04362-227100 (Off)
04322-247555 (Res)
Cell:94450-48884
Nagapattinam Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Suriya Nagar, Kadambadi,
Nagapattinam – 611 001.
04365-248460 (Off)
Cell:94450-48886
Madurai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 165/G, Alalagarkoil Main road,
Madurai – 625 012. .
0452-2531395 (Off)
Cell:94450-48891
Dindigul Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 576/4, EB Colony,
Chettinaykkanpatty, Trichy By-pass Road,
Dindigul – 624 004.
0451-2461828 (Off)
0451-2461461 (Res)
Cell:94450-48889
Theni Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# W-33-21-D/37, Udaippa Engineering College Road, Karuvel Nayakan Patty
Theni – 625 531. .
04546-255477 (Off)
04546-260160 (Res)
Cell:94450-48890
Sivagangai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 3/391, Thirupathur Road,
Sivagangai – 630 561.
04575-240222 (Off)
Cell:94880-70389
Ramanathapuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
D-Block, Rameswaram Main Road
Near Customs Office
Ramanathapuram – 623 503.
04567-230036 (Off)
04567-231355 (Res)
Cell:94450-48893
Virudhunagar Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Kumarasamy Raja Nagar,
Collectorate Campus,
Virudhunagar - 626 002.
04562-252678 (Off)
04562-252155 (Res)
Cell:94981-05789
Tirunelveli Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
No:16-53A/1, Masilamani Nagar,
Near Central Jail, Palayamkottai,
Tirunelveli – 627 005.
0462-2580908 (Off)
0462-2530387 (Res)
Cell:94450-48895
Thoothukudi Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 2/175, Palayamkottai Main Road
Maravan Madam,
Thoothukkudi – 628 101.
0461-2310243 (Off)
Cell:94450-48896
Kanyakumari@Nagercoil Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
#210/1A, Lourdu Annai Salai,
SP Camp office Road,
Thalavaipuram Road, Punnai Nagar,
Nagercoil - 629 004.
04652-227339 (Off)
Cell:94981-05871
Special Investigation Cell
Officers' Name & Address
Phone Numbers
The Inspector General of Police,
Special Investigation Cell – I & II,
Vigilance and Anti-Corruption,
NCB 25-A, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24616900 (Direct)
044-24615929 / 24615949
044-24615989 / 24954142
Fax:044-24615556
The Superintendent of Police,
Special Investigation Cell,
Vigilance and Anti-Corruption,
NCB 27, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24610550 (Off)
044-24612002 (Fax)
The Addl. Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
NCB 27, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24950017 (Off)
Cell:94450-48869
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24959880 (Off)
Cell:94450-48870
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
044-24959866 (Off)
Cell:94450-48871
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell - I,
Vigilance and Anti-Corruption,
NCB-25A, P.S. Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai - 600 028.
044 - 24959877 (Off)
Cell:94450-48872

Sunday, May 24, 2015

ஆபிரஹாம் லிங்கன்

ஆபிரஹாம் லிங்கன்
முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.
1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.
சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!
இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.
இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.
மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

அடுத்தவர்களிடம் இதை பேசாதீங்க...

வீட்டுக்கு வரும் உறவினர்களையும், விருந்தினர்  களையும் வரவேற்று, உபசரித்து பேசுவதில்கூட நிறைய கவனம் தேவைப்படுகிறது. அவர்களிடம் எதை பேசுவது என்பதைவிட, எதை பேசக்கூடாது என்பது ரொம்பவும் கவனிக்கத்தக்க விஷயம். 

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் இங்கே பேசுவோம்! 

பெண்ணின் திருமணம்:

திருமண பருவத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறார்கள். பெண்ணின் திருமணம் பற்றி அவர் களது பெற்றோரிடம் பக்குவமாக பேசவேண்டும். 

 – உங்கள் பெண்ணிற்கு திருமணம் எப்போது? 

– ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? 

– இன்னும் எவ்வளவு நாள் உங்கப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கப் போகிறீர்கள்? 

.. என்றெல்லாம் கேட்பது அவர்களது மனதை நோகடித்துவிடும்.

அது பற்றி விசாரிக்க நேர்ந்தால் அல்லது அது பற்றி அவர்களே உங்களிடம் கூறினால், ‘ எனக்குத் தெரிந்த நல்ல வரன் இருந்தால் நானும் சொல்கிறேன். அதை பற்றி கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று அவர்களுக்கு ஆறுதலாக பேசுங்கள். ஏனெனில் திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பவர்கள் ஏற்கனவே மனக்கஷ்டத்தில்தான் இருப்பார்கள். மகளுக்கு வயது அதிகரித்துக்கொண்டே போகிறதே என்ற கவலை அவர்கள் மனதை உறுத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அக்கறையாக கேட்கும் கேள்வி அவர்   களுக்கு வேதனை தரக்கூடியதாக மாறிவிடக்கூடாது. 

குழந்தை:


திருமணம் முடிந்தவுடன் அடுத்து எல்லோரும் கேட்கும் கேள்வி, ‘ஏதாவது விசேஷம் உண்டா?’ என்பதுதான். சில  தம்பதிகளுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். சிலருக்கு வேறு ஏதாவது எதிர்கால திட்டம் இருக்கலாம். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு வைத்தால் அதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு சங்கடமாக இருக்குமல்லவா?

குடும்ப வருமானம்:

ஒருவர் மீது நாம் அதிக அக்கறை செலுத்துகிறோம் என்ற உரிமையில் அவரிடம் வருமானத்தைப் பற்றி கேட்பது தவறு. குடும்பத்தில் யார் யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அவர்   களது மொத்த வருமானம் எவ்வளவு? என்பன போன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. அவர்கள் வருமானத்தை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவேண்டும். ஏன்என்றால் இந்த சம்பள விஷயத்தை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டோம். ஒன்று ‘இவ்வளவுதானா?’ என்போம். இல்லாவிட்டால் ‘அவ்வளவு சம்பளமா?’ என்று ஆச்சரியப்படுவோம்.  இந்த இரண்டு பதிலுமே சம்பந்தப்பட்டவர்களை எரிச்சலடையச் செய்யும். 

உத்தியோகம்:

எல்லா வீடுகளிலும் எதிர்பார்த்த வேலை கிடைக்காத இளைஞர்களோ, இளம்பெண்களோ இருந்துகொண்டிருப்பார்கள். அந்த கவலை, குடும்பம் முழுக்கவே இருந்துகொண்டிருக்கும். சிலர் அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘உங்கள் மகன் எங்கே வேலை செய்கிறான்?’ என்று ஆரம்பிப்பார்கள்.

‘அவனுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை’ என்று பெற்றோர் சொன்னால் ‘ஏன் கிடைக்கவில்லை? அவன் நல்ல மதிப்பெண் பெறவில்லையா? மகனுக்கு வேலையில்லாவிட்டால் உங்கள் குடும்பம் கஷ்டப்படுமே?’ என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டு அவர்களை வெறுப்பேற்றிவிடுவார்கள். 

அந்தரங்கம்:

ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கை என்பது ரகசியமானது. நீங்கள் அவருக்கு மிக நெருக்கமானவர் என்பதை காட்டிக்கொள்ள அவரது அந்தரங்க வாழ்க்கையை பற்றி கேள்விகேட்பது நியாயமில்லை. அவர் திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலித்து தோற்றிருக்கலாம். அதை அவரது புது மனைவி முன்னால்  வைத்து பேசுவதும் சரியானதல்ல. அதுபோல் சிலர், குழந்தைகள் முன்னால்வைத்து அவர்களது தந்தையின் கடந்த கால காதல் விஷயங்களை சுவாரஸ்யமாக பேசுவார்கள். அதுவும் யாருக்கும் பிடிக்காத பேச்சாகும். 

கடந்தகால வாழ்க்கை:

கடந்தகால போராட்டங்களை மறந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பவரிடம் திரும்பத் திரும்ப அவைகளை நினைவுபடுத்தும் விதத்தில் விசாரிப்பது, கேள்விகள் கேட்பது தவறு. உன்னுடைய முதல் கணவர் என்ன செய்கிறார்? உன்னைப் போல ஒரு பெண்ணோடு வாழ அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என்பது போன்ற ஆதங்கம், அங்கலாய்ப்பை எந்த பெண்ணும் ரசிப்பதில்லை. எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றிய விசாரணை நமக்கெதற்கு என்று ஒதுங்கியிருப்பதே நல்லது.

‘நீ விவாகரத்து பண்ணிட்டியே உன் முதல் மனைவி, அவளை நான் நேத்து பார்த்தேன். பாவம் ரொம்ப நொந்துப் போயிருக்கா. எல்லாம் அவ தலையெழுத்து’ என்று இரண்டாவது மனைவி முன்னால் வைத்து அவளது கணவரிடம் நொந்துகொள்வதும் தவறு. அப்படி பேசும்போது இரண்டாவது மனைவிக்கு அச்சம் ஏற்படும். ‘இந்த ஆளே நம் கணவரை முதல் மனைவியிடம் கொண்டுபோய் மீண்டும் இணைத்துவிடுவார் போல் தெரிகிறதே!’ என்று நினைத்துவிடுவாள்.

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும் அவர்களிடம் எதை பேசவேண்டும் என்று ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையோடு பேச்சை நிறுத்திக்
கொள்ளவேண்டும்.

மருமகளின் தாய் வீடு:

புகுந்த வீட்டினர் தன்னுடைய பிறந்த வீட்டை மதிக்க வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்புவார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் அந்த வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். 

மருமகளின் பிறந்த வீட்டைப் பற்றி வருவோர் போவோரிடம் தேவையற்ற விஷயங்களை பேசும் மாமியார்களால் குடும்பத்தின் நிம்மதி குலையும். அதுபோல் தன் வீட்டில் போய் மாமியாரை குறைசொல்வதையும் பெண்கள் தவிர்க்கவேண்டும். எதை பேசக்கூடாது என்பதில் மாமியாரும், மருமகளும் கவனமாக இருந்தால்தான் அந்த குடும்பத்து நிம்மதியை காப்பாற்ற முடியும்.

பாகப் பிரிவினை:

எல்லா குடும்பங்களிலும் பாகப்பிரிவினை நடக்கும். அதில் ஒரு சிலர் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அது அவர்கள் இஷ்டம் என்று விட்டுவிடவேண்டும். தேவையில்லாமல் அதுபற்றி பேசி, குட்டையைக் குழப்பும் செயலில் ஈடுபடக்கூடாது. சொத்து விவகாரம் ஒரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் அடுத்தவர்கள் தலையிடுவது அவசியமில்லாதது. எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும் நம்முடைய எல்லை எதுவரை என்பதை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். அவர்களாக தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டால் மட்டுமே அதுபற்றி பேசவேண்டும். 

சோகமான நிகழ்வுகள்:

எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் ஏதேனும் சோகமான நிகழ்ச்சியைப் பற்றி பேசி எல்லோரையும் கலங்கடிப்பது ஒரு சிலருக்கு கைவந்த கலை. உள்நோக்கம் எதுவும் இல்லாவிட்டாலும் பேசத் தெரியாமல் பேசி வம்பை விலைக்கு வாங்கக்கூடாது. என்றோ நடந்த சோகத்தை மீண்டும் மீண்டும் கிளறவேண்டியதில்லை. அதை வேகமாக மறக்க, நம்மால் முடிந்தால் உதவவேண்டும். இல்லையேல் சும்மா 
இருந்துவிடவேண்டும்.

உடல் நிலை:


ஒருவருடைய உடல் நிலையை பற்றி தொடர்ந்து அவரிடம் பேசி நோகடிக்கக்கூடாது. அதுபோல் பலர் முன்னிலையில் வைத்து நோய் பற்றி விசாரிப்பதும் தவிர்க்கப்படவேண்டும். தான் நோயாளி என்பதை எல்லோரும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏன்என்றால் ஒருவர் நோயாளி என்றால் அவரது குடும்பத்தினரும், அவரது டாக்டரும் அதை பற்றி அறிந்தால்போதும். ஊரில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. 

பேசுவதற்குதான் வாய். ஆனால் என்ன பேசுவது, எந்த இடத்தில் எப்படி பேசுவது, யாரிடம் எப்படி எதை பேசுவது என்ற எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும். விருந்தோம்பலில் இதுவும் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.

Saturday, March 28, 2015

இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து!

இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து!
-vikatan article
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் காபி, டீ-யில் தவறாமல் உபயோகப்படுத்துவது 'சுகர்ஃப்ரீ / ஈக்குவல்’ (Sugar free/Equal) எனும் வஸ்துவைத்தான். இன்றைக்கு இது அனைத்து ஹோட்டல்கள், வீடுகள் என்று எங்கெங்கும் நீக்கமற தினமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன், சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்ட பொருள் 'சாக்ரின்’. அதைப் பயன்படுத்தினால், 'சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வரலாம்’ என்று கருதப்பட்டதால், மெள்ள அந்த இடத்தை 'சுகர்ஃப்ரீ / ஈக்குவல்’ பிடித்துக் கொண்டது. சுகர்ஃப்ரீயின் வேதியியல் பெயர் அஸ்பார்டேம் (Aspartame).
இந்த 'அஸ்பார்டேம்’ சாக்ரினைவிட மிகவும் கெடுதலான பொருள் என்று உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், நூற்றுக்கணக்கான மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அசைக்க முடியாத மாபெரும் ராட்சத சக்தியாக 'அஸ்பார்டேம்’ வேரூன்றிவிட்டது. இதைப் பற்றிய மருத்துவ உண்மைகளை உங்களுக்குச் சொல்லவேண்டியது என் தார்மிகக் கடமை.
1971-ம் ஆண்டு 'ஸியர்லி’ என்கிற பிரபல மருந்து கம்பெனியின் மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் சிலேட்டர், வயிற்றுப் புண்ணுக்கான மருந்துகளை சோதனை செய்து கொண்டிருந்தார். தற்செயலாக அவரின் விரலில் பட்ட வெள்ளை நிற பவுடரை சுவைத்தார். சீனியைவிட 500 பங்கு இனிப் பாக இருந்த அந்த பவுடர்தான் 'அஸ்பார்டேம்’. அன்று முதல் 'ஸியர்லி’ கம்பெனிக்கு அடித்தது யோகம்! 1974-ம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்.டி.ஏ. (FDA-Food and Drug Administration) இதற்கு அனுமதி அளித்தது. அதற்குள், 'அஸ்பார்டேம் கெடுதலை உண்டு பண்ணலாம்’ என்று நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துவிட்டன.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநலப் பேராசிரியர் டாக்டர் ஓல்னி அஸ்பார்டேமுக்கு எதிராக தனி மனித போராட்டத்தையே தொடங்கினார். அஸ்பார்டேம் உட்கொண்ட எலிகளுக்கு மூளையில் புற்றுநோய் வருவதை நிரூபித்து, 'மனிதர்களுக்கும் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம்’ என்ற கருத்துக்களை முன் வைத்தார். உடனே (1975) அஸ்பார்டேமுக்கு வழங்கிய அங்கீகாரத்தை வாபஸ் பெற்றது எஃப்.டி.ஏ. அதுவரை பணமழையில் நனைந்து வந்த 'ஸியர்லி’ கம்பெனி சும்மா இருக்குமா..? 'அஸ்பார்டேம் மிகவும் பாதுகாப்பானது’ என கிட்டத்தட்ட 200 மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது.
ஒரு விஷயத்தை 'கெட்டது’ என்று சொல்வதற்கும்... அதே விஷயத்தை 'நல்லது' என்று சொல்வதற்கும் இந்த டாக்டர்களே ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகிறார்களே... என்று உங்களுக்கு ஆச்சர்யமாக / அதிர்ச்சியாக இருக்கிறதா? சக்தி வாய்ந்த மருந்து கம்பெனிகள் நினைத்தால், எந்த மாதிரி ஆராய்ச்சி முடிவுகளும் வெளியிட முடியும் என்கிற கசப்பான உண்மையை வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறேன். 'ஒருவன் கொலைகாரன்’ என்று சொல்வதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்கள். 'அவனே நிரபராதி’ என்று வாதிடுவதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்களே, அதுபோலத்தான்.
'ஸியர்லி கம்பெனி வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோடிக்கப்பட்ட பொய்’ என்று டாக்டர் ஓல்னி வாதிட்டார். இதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஸ்கின்னர், விசாரணை கமிஷன் அமைக்காமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார் (பிறகு இவர், ஸியர்லி கம் பெனியின் சட்ட ஆலோசகராகச் சேர்ந்து கொண்டது தனிக்கதை).
1984-ம் ஆண்டு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ரீகன், தன்னுடைய நெருங்கிய நண்பரான ஹேஸ் என்பவரை எஃப்.டி.ஏ-வின் புதிய தலைவராக நியமித்தார். அதே சூட்டோடு அஸ்பார்டேமுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துவிட்டு, அடுத்த வருஷமே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸியர்லி கம்பெனியிலேயே சேர்ந்தார் ஹேஸ். க்ளைமாக்ஸாக 1985-ம் ஆண்டு ஸியர்லி கம்பெனியை விலைக்கு வாங்கிவிட்டது... 'மான்சான்டோ’.
முந்தைய சாக்ரினை உற்பத்தி செய்தது, இந்த மான்சான்டோ நிறுவனம்தான். பிரபல பூச்சிக்கொல்லி மருந்தாக உலகெங்கும் உபயோகிக்கப்பட்டு, தற்போது இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் தடை செய்து விட்ட டிடிடீ (DDT) உற்பத்தி செய்பவர்களும் இவர்கள்தான்.
தற்போது, உலகளவில் முக்கால் பங்கு அஸ்பார்டேமை உற்பத்தி செய்வது மான்சான்டோ. மீதி கால்பங்கு உற்பத்தி செய்வது யார் தெரியுமா... அஜினோமோட்டோ! உலகெங்கிலும் உள்ள சமையல் அறைகளைக் கெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் 'மானோசோடியம் குளுடாமேட்’ (MSG) என்கிற வேதிப்பொருள் கலந்த அஜினாமோட்டோவை உற்பத்தி செய்பவர்கள்தான் இவர்கள். இந்த இரண்டு பேரின் பிடியில் சிக்கியுள்ள அஸ்பார்டேம், நீங்கள் அன்றாடம் பருகும் காபி, டீயில் தவறாமல் இடம் பிடித்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?
http://tgrpage.blogspot.in/

Thursday, December 11, 2014

சோழ மன்னர்களின் பட்டியல்

முற்காலச் சோழர்கள்
கி.பி. 1 முதல் கி.பி 150 வரை ஆண்ட சோழர்கள்
1. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான்
2. கிள்ளிவளவன்
3. பெருநற்கிள்ளி
4. கோப் பெருஞ்சோழன்
கி.பி. 150 முதல் கி.பி 300 வரை ஆண்ட சோழர்கள்
1. நெடுமுடிக்கிள்ளி
2. இளங்கிள்ளி முதலியோர்.
வேறு முற்கால சோழ அரசர்கள் சிலர்.
(இவ்வரசர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருந்தாலும் மிகுதியான வரலாற்று செய்திகள் அறிவதற்கு ஏதும்இல்லை)
01. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
02. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி
03. வேல்பல் தடகைப் பெருநற்கிள்ளி
04. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி
05. தித்தன்
06. சோழன் நல் உருத்திரன்
07. முல்லைக்கலி சோழன்
08. நல்லுத்தரன்
09. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
10. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
11. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
12. வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி
13. அத்திரிசோழன்
14. அரியசந்திரசோழன்
15. அண்டசோழன்
16. அடைவளைசோழன்
17. அன்னசோழன்
18. அன்பசோழன்
19. ஆந்தைசோழன்
20. ஆதனழிசிசோழன்
21. ஆலங்கிள்ளிசோழன் (ஆலசோழன்)
22. ஆதிராசேந்திரசோழன்
23. ஆனைச்சேவகசோழன்
24. அபயகுலசேகரசோழன்
25. கலிக்காமசோழன்
26. கடம்பசோழன்
27. கடையசோழன்
28. கண்டர்கிள்ளிசோழன்
29. காங்கமசோழன்(காந்தமசோழன்)
30. கிள்ளிசோழன்
31. கொள்ளிசோழன்
32. குடசோழன்
33. குருசோழன்
34. குமாரமகீதரசோழன்
35. கூரசோழன்
36. கொள்ளிசோழன்
37. கோப்பெருஞ்சோழன்
38. பஞ்சநதசோழன்
39. பாண்டுசோழன்
40. பாலையசோழன்
41. பாதிரிசோழன்
42. பாம்பசோழன்
43. புத்திகழிசோழன்
44. பசுபோகசோழன்
45. புகழ்ச்சோழன்
46. புலவசோழன்
47. பூதசோழன்
48. பெருந்திருமாவளவசோழன்
49. பெரும்பற்றசோழன்
50. பைஞ்ஞீலசோழன்
51. பொன்னசோழன்
52. பெரியசோழன்
53. பேரெயில்சோழன் (பேர்சோழன்)
54. மண்ணிசோழன்
55. மயில்சோழன் (மயிலாடுசோழன்)
56. மறவசோழன்
57. மஞ்சசோழன்
58. மதுராந்தகசோழன் (சோழவல்லபன்)
59. மாந்தைசோழன்
60. முள்ளிசோழன்
61. வடமசோழன்
62. வாஞ்சிசோழன்
63. வாலிசோழன்
64. வீரவாதித்தசோழன்
65. வெட்டுவசோழன்
66. வெண்டசோழன்
67. வெண்ணிசோழன்
68. சந்திரசோழன்
69. சங்கரசோழன்
70. சாளுவசோழன்
71. சித்தசோழன்
72. சிரசோழன்
73. சுந்தரசோழன்
74. செங்கமலசோழன்
75. சென்னிசோழன்
76. சேந்தசோழன்
77. நல்லுருத்திரசோழன்
78. நீவசோழன்
79. ஓடம்போகிசோழன்
80. ஐவசோழன்
81. உலகநாதசோழன்
82. ஈச்சோழன்
83. தக்கோலசோழன்
84. திருமலைசோழன்
இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன்
பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விசயாலயச் சோழன் கி.பி. 848-871
ஆதித்தச் சோழன் கி.பி. 871-907
பராந்தகச் சோழன் I கி.பி. 907-950
கண்டராதித்தர் கி.பி. 949-957
அரிஞ்சயச் சோழன் கி.பி. 956-957
சுந்தர சோழன் கி.பி. 956-973
ஆதித்தக் கரிகாலன் கி.பி. 957-969
உத்தம சோழன் கி.பி. 970-985
இராசராசச் சோழன் I கி.பி. 985-1014
இராசேந்திரச் சோழன் கி.பி. 1012-1044
இராசாதிராசச் சோழன் கி.பி. 1018-1054
இராசேந்திரச் சோழன் II கி.பி. 1051-1063
வீரராசேந்திரச் சோழன் கி.பி. 1063-1070
அதிராசேந்திரச் சோழன் கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்கச் சோழன் I கி.பி. 1070-1120
விக்கிரமச் சோழன் கி.பி. 1118-1135
குலோத்துங்கச் சோழன் II கி.பி. 1133-1150
இராசராசச் சோழன் II கி.பி. 1146-1163
இராசாதிராசச் சோழன் II கி.பி. 1163-1178
குலோத்துங்கச் சோழன் III கி.பி. 1178-1218
இராசராசச் சோழன் III கி.பி. 1216-1256
இராசேந்திரச் சோழன் III கி.பி. 1246-1279
சோழர் சமூகம்
சோழ அரசாங்கம்
சோழ இராணுவம்
சோழர் கலை
சோழர் இலக்கியம்
பூம்புகார்
உறையூர்
கங்கைகொண்டச் சோழபுரம்
http://dinesh3737.blogspot.in/


Psychological Solutions - இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு !!!

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.